Dr.மன்மோகன் சிங்
கூலிக்கு மாறடிக்கும் ஊடகங்களால் ஒரு நல்ல பிரதமரை தோற்கடித்து விட்டோமா? திடீரென ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல்லாம் திவாலாகியது. சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உலகமே பொருளாதார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது. உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் பேர் வேலை இழந்தனர். உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன. சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன. கச்சா எண்ணெய் விலை 160 டாலர்களை தொட்டு அரக்க முகம் கொண்டு பயமுறுத்தியது. பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் போர் பதற்றங்கள் வேறு. இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யாவின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின. ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை. வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது. மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து