பரிசுத்த வேதாகமத்தில் _ நாம் செய்ய கூடாதவை

*பரிசுத்த வேதாகமத்தில் நாம் செய்ய கூடாதென்று தேவன் கட்டளையிட்டுள்ள சில காரியங்கள்..*
•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•
1. குறி கேளாமல் இருக்க வேண்டும். (லேவியராகமம்- 19:26)
2.நாள் பாராமலும் இருக்க வேண்டும்.
(லேவியராகமம்- 19:26; உபாகமம்-18:10)
3. புற ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ள கூடாது.
(உபாகமம்-18:19;
எரேமியா-10:12)
4. தன் மகனையாவது, தன் மகளையாவது, தீக்கடக்கப் பண்ணக்கூடாது.
(உபாகமம்- 18:10)
5. குறி சொல்லாமல் இருக்க வேண்டும். (உபாகமம்-18:10)
6. அஞ்சனம் பார்க்காமலும் இருக்க வேண்டும்.
(உபாகமம்-18:10)
7.சூனியகாரனாயிருக்க கூடாது.
(யாத்திராகமம்- 22:18)
8.மந்திரவாதியாயிருக்க கூடாது.
(உபாகமம்-18:11)
9.சன்னதக்காரனாயிருக்க கூடாது.
(உபாகமம்-18:11)
10.மாயவித்தைக்காரனாயிருக்க கூடாது.
(உபா.18:11)
11.செத்தவர்களிடத்தில் குறி கேட்க கூடாது.
(உபாகமம்-18:11)
12. அடையாளமான எழுத்துககளை(முத்திரைகளை)உங்கள் மேல் குத்திக் கொள்ளக் கூடாது.
(லேவி. 19:28)
13. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கக் கூடாது. ஸ்திரீகளின் உடைகளை புருஷர் தரிக்கக் கூடாது.
(உபா.22:5)
14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்பட கூடாதிருக்க வேண்டும்.(2 கொரி 6:14)
15. உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூரக் கூடாது.
(1 யோவான் 2:15)
16. இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கக் கூடாது. (ரோமர் 12:2)
*கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..!*
•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*