Posts

Showing posts from January, 2021

பாஸ்டர்

*ஒரு ஊழியக்காரர் தேவ பிரசன்னத்திலும் தேவனோடு ஐக்கியத்திலும் உறுதியாக இருக்கிறார் என்பதை  கண்டு கொள்ளும் வழிமுறைகள்* 1.அன்பாக இருப்பார். 2.நிதானமாக பேசுவார். 3.எரிச்சல் அடையமாட்டார். 4.குறை பேசமாட்டார். 5.ஸ்தோத்திரம் செய்து கொண்டு இருப்பார். 6.எப்போதும் ஆத்துமாக்களை பற்றியும் சபை வளர்ச்சி பற்றியும் பேசுவார் 7.ஜெபத்திலேயே இருக்கிறது போல நடிக்கமாட்டார். 8.தன்னை பற்றி மேன்மையாக பேச மாட்டார். 9.பண ஆசை, பொருளாசை இருக்காது. 10.மற்றவர்களின் குறைகளை மூடுவார். 11.சத்தியத்திற்காக நிற்பார். 12.தீர்மானங்களில் பதற்றம் அடைய மாட்டார். 13.மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கமாட்டார். 14.எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று விசுவாசமாக இருப்பார். 15.சுய பரிதாபத்தை சம்பாதிக்கமாட்டார். 16.கொடுக்கிற தயாளனாக இருப்பார். 17.யாரையும் சபிக்க மாட்டார். 18.ஆவியானவருக்கும் அவர் வழிநடத்துதலுக்கும் முதலிடம் கொடுப்பார். 19.மற்றவர் கேடுக்கு காரணமாக இருக்கமாட்டார். 20.ஊழியங்களை தவிர மற்ற அலுவல்களில் சிக்கி கொள்ளமாட்டார். *தேவனே எனக்கு கிருபை தாரும்*

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பயனுள்ள பத்து : 1. வெந்தயம் : (Fenugreek) ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கி, பித்தத்தை முறிக்கும். இரவில் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் நீருடன் சேர்த்து குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் அந்தக நீரை குடிக்கலாம். முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். 2. நெல்லிக்காய் : (Amla/Indian Gooseberry)  ரத்தத்தில் கலக்கும் இன்சுலினை, சிறந்த முறையில் கிரகிக்க நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை, அதைவிட நான்கு மடங்கு நீருடன் சேர்த்து அருந்தலாம் ; ஆனால், வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. 3. பட்டை : (Cinnamon)  டைப் 2 சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. இன்சுலின் உடலில் சீராகச் சுரக்க உதவும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஒரு டீஸ்பூன் பொடியைத் தண்ணீரில் கலந்து, இரண்டு வேளை உட்கொண்

"சும்மா" - 15 விதத்தில்

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை,  நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும். 1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet* 2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely* 3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact* 4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost* 5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie* 6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use* 7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often* 8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always* 9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just* 10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty* 11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat* 12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare* 13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily* 14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் -

இந்தியா- லஞ்சம் - சிந்திக்க

இந்தியா பரிசோதனைக்காக விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப தீர்மானித்தது. கூட ஒரு மனிதனையும்.... போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித நம்பிக்கையும் இல்லாததால் நஷ்டபரிகாரம் தருவதாக முன்னதாகவே  தீர்மானம் செய்யப்பட்டது . பலியாடு யாரென்று தீர்மானிக்கின்ற இன்டர்வியூவில் முதலில் வந்தது ஒரு சர்தார்ஜி. இரண்டு லட்சம் ரூபா தன் குடும்பத்திற்கு தந்தால் தான் போகத்தயாரென்று கூறினார். ஆனால் அதற்கடுத்து வந்த ஹிந்திக்காரன் சொன்னான் தனக்கு ஒரு லட்சம் தந்தா தான் போவதாக. அடுத்த ஆளாக வந்தது ஒரு தமிழன். காசு கொடுத்தா எந்த நரகத்துக்கும் போகத்தயாரா இருப்பான் இந்த தமிழன். ஐம்பதாயிரத்துக்கு சம்மதிப்பான் அப்படினு நெனச்சார் இன்டர்வ்யூ நடத்துபவர். ஆனால்.... தனக்கு மூனு லட்சம் தந்தா அதுல ஒரு லட்சம் ஆபிசர்க்கு தாரேனு தமிழன் சொன்னதால ஆபிசர் சம்மதிச்சி தமிழன அனுப்புறதுனு தீர்மானம் ஆனது. ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்குப்பிறகு அதே தமிழன ரோட்ல வச்சி பாத்ததும் அதிர்ச்சி அடைந்தார் இண்டர்வியூ நடத்திய ஆபிசர். அப்ப அந்த தமிழன் சொன்னது ... "மூணு லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன். ஒர

கார், பைக் ஓட்டுறீங்களா இத படிங்க

நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். படிமங்கள்! அனைவருக்கும்  பகிருங்கள்!! சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று...... முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் முகவரி என்று....... கடந்துச் செல்லும் கனரக வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் கண்மணி என்று.,..... விடியலும்  விலாசமுமாய் நம்பிக்கையும் எதிர்காலமுமாய் நம்பியிருக்கிறோம் உன்னை...... ஐந்து நிமிடங்கள் காத்திருந்து  அடுத்து வரும் பேருந்திற்காக காத்திருக்க முடியாத உனக்காக நீ பிறந்த நாள் முதல் இன்று வரை காப்பாற்றுவாயென்று காத்திருக்கிறோம் காலமெல்லாம் உடனிருப்பேனென்று கட்டியத்தாலி நினைவிருக்கிறதா கண்ணாளா காத்திருப்பேன் கடைசிவரை விரல் பிடித்து நான் நடந்து கரை தாண்டவும், கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே விழித்திருப்பேன் நீ வரும் வரை...,.. அலுவலகத்திற்குத் தானே சென்றிருக்கிறாய் அப்படியே திரும்பி வருவாயென்று காத்திருக்கிறோம் உடையாமலும் உரசாமலும்  கவனமுடன்  திரும்பி வா நீ செல்லும்

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்!

*குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்!* #GoodParenting குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் ய

Johnny Johnny Jock

Johny johny..                 Yes papa! Private job.                 Yes papa! Lot of tension..                 Yes papa! Too much work..                 Yes papa! Family life..                  No papa! Bp-sugar..                 High papa! Yearly bonus..               Joke papa! Monthly pay..                Low papa! Personal life..                Lost papa! Weekly off!       Ha Ha Ha😄😄😄 Its really heart touching poem☝plz share other grup.

கடி ஜோக்

டாக்டர் : வாங்க, உட்காருங்க,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க, நாக்க நீட்டுங்க, திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க .... இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ? வந்தவர் :  ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!😂😃😂

கடி ஜோக்

காலையில் பால் காய்ச்ச ஸ்டவ்ல வச்சுட்டு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிணா... பால் பொங்கவே இல்ல... அப்புறம் திறந்து பாத்தா; அது.... இட்லி மாவு😱😰 அப்புறம்.... பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை... ஒரு கொலகாரன் கூட  பொணத்தை மறைக்கப் இத்தனை பட்டிருக்கமாட்டான்🤣😂🤣

பேச்சு - உளவியல் ஆலோசனைகள்

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! 3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் .. 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.. 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .  6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...  அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....  7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..   8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.. 9. குழந்தைகளோடு பேசும்போது,  அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். . 10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்.. 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. 4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்.. 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.. 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்.  நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.  யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்....   நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.. 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள்.  ...  உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..   3. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்..,   அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..  4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்...  எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....   5. உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்...  இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..    6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்க

சிரிக்க

பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க...😔😩 பாவமாயிருந்துச்சு, அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்...😣🏃 ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு வந்துட்டேன்...😝😜😋 😝நமக்கு எதுக்கு ஊர் வம்பு😝

சிரிக்க

100 திருமணமான ஆண்கள் கூட்டத்தில் "பெண்டாட்டியிடம் அடிவாங்கியவர்கள் கை தூக்குங்கள்" என்று கேட்கப்பட்டது. ஒருவர் தவிர எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். கை தூக்காத அந்த நபரை அழைத்து "பரவாயில்லையே உங்கள் மனைவி அனுசரணையானவர் போலும், நீங்கள் அதிர்ஷ்ட்டசாலி" என புகழ்ந்தனர். அதற்கு அவர் சொன்னார்.... .... ... ... ... ... ... ...   .  .. ... ... ...   . ... "அடப்போங்கப்பா, நீங்கவேற வயித்தெரிச்சல கிளப்பாதீங்க... நேத்து மனைவிகிட்ட நான்  வாங்கின அடியில கையவே தூக்க முடியலயா"....😡😡😡😡😁😁😁😁

பெண் பார்க்கும் முன்....

பெண் பார்ப்பது...? ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்... எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்... குருநாதர் சொல்கிறார்... *அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும், *அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும், *உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும், *குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது, *பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது, *மெலிந்தவளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய், *வெள்ளையானவளை முடிக்காதே! அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும், *கருத்தவளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும், *படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள், *படித்தவளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள், *பணக்காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது, *ஏழையை முடிக்காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும

சிரிக்க

மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க கணவன் : ஒண்ணுமில்ல! மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க! கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

நகைச்சுவை

👩🏻👩🏻👩🏻👩🏻‍🍳 உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை          but அவ்வளவு பெரிய கரண்டி தான் எங்க இருக்கூனு தெரியல்ல                                      😜😜😜😜😜😜😋😋 🕺🏻 ''டேய்..ஓடாதே.. நில்ரா.. எதுக்குடா  இவளை தூக்கிட்டு ஓடறே ?'' ''நீங்கதானே சார் சொன்னீங்க. விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃🏻 🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)" "என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு" "(ஆத்தி இடியாப்பமா இது😳😭) சூப்பர் செல்லம்👌😀"   👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள். . கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி தான். 👩🏻👩🏻👩🏻👩🏻‍💻 *மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் பெண்கள் முதலிடத்தில்* *வருகிறார்கள்...*  *இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள் மாணவர்கள் முதலிடம் வருவார்கள்..* 😜😜😜😜 😲 கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்... மனைவி : "வந்துட்டீங்களா...! உங்களைத்தான்