நகைச்சுவை

👩🏻👩🏻👩🏻👩🏻‍🍳 உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை
         but
அவ்வளவு பெரிய கரண்டி தான் எங்க இருக்கூனு தெரியல்ல
                                    
😜😜😜😜😜😜😋😋


🕺🏻 ''டேய்..ஓடாதே..
நில்ரா..

எதுக்குடா 

இவளை தூக்கிட்டு ஓடறே ?''

''நீங்கதானே சார் சொன்னீங்க.

விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃🏻


🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)"

"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"

"(ஆத்தி இடியாப்பமா இது😳😭) சூப்பர் செல்லம்👌😀"

 
👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி தான்.


👩🏻👩🏻👩🏻👩🏻‍💻 *மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் பெண்கள் முதலிடத்தில்* *வருகிறார்கள்...* 

*இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள் மாணவர்கள் முதலிடம் வருவார்கள்..*
😜😜😜😜


😲 கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...

மனைவி : "வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்"!.

கணவன் : "ஏன்?... என்னாச்சு"..?..

மனைவி : "இன்றைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,...நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்"! ...

கணவன் : "சரி"...!

மனைவி : "இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது..!

அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி"!.

கணவன் : "(கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே"!.

மனைவி : " மன்னிக்கிறதா?..

அந்த பேச்சுக்கே இடமில்ல.

எங்க அந்த உருட்டு கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)

 மகன் : " யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா"!..

அப்பா : "ஏண்டா"..?

மகன் : "நான்தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா"!!

அப்பா : "அடப்பாவி மகனே! 

வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... 

இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..!

😁😁😁😁😁


🤣 சிரிக்க மட்டுமே! 
வாய்விட்டுச் சிரித்தால் 
நோய்விட்டுப் போகும்!

 *************            
மனைவி: 
ஏங்க!  உங்களைக் 
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு 
என் புத்தியை 
செருப்பாலத்தான்  
அடிச்சுக்கோணும்.....!

கணவன்: 
செருப்பு இந்தா இருக்கு.....!  
புத்திக்கு எங்கே போவ!!?? 

                  *************
கணவன்:  
"என்ன சமைச்சிருக்கே ...? 
சாணி வரட்டி மாதிரி இருக்கு... 
நல்லாவேயில்லை"......

மனைவி:  
"கடவுளே! ..... 
இந்த மனுஷன் 
இன்னும் என்னவெல்லாம் 
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....? 
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !
                 *************
😳😳🙄
*"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க....*

*அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"*

*"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க...*

*அப்போ இந்தச் சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"*
😒😒😏


😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍 😜

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics