நம் நாட்டில்தான் நடக்கிறது!

இந்த நாட்டில்தான் நடக்கிறது!
----------------------------------------------------
* 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவன்
  கைதாகும்போது, முகத்தைப்
  பொத்திக் கொண்டு செல்வதும்,
  100 கோடி ஊழல் செய்தவன்
  கைதாகும்போது, டாட்டா காட்டியபடி
  சிரித்துக் கொண்டே செல்வதும்
  இந்த நாட்டில்தான்...!
           
* சாதரணமாய் பிக்பாக்கெட்
அடித்தவனுக்கு சிறையில்
கொசுக்கடியுடன்,நாலைந்து பேர்
தங்கும் சுகாதாரமற்ற அறையில்
இடம் தருவதும்..,
கோடி கோடியாய் ஊழல் செய்த
வழக்கில் தண்டிக்கப்பட்டவனுக்கு,
டிவி வசதியுடன் சொகுசு
அறை தருவதும்
இந்த நாட்டில்தான்...!

*கஷ்டப்பட்டு பட்ட மேற்படிப்பு படித்தவன் வேலையில்லாமல் திண்டாடுவதும்,
5 ஆம் வகுப்புகூட படிக்காமல்,
சாராயம் விற்றவனெல்லாம்
கல்வி அமைச்சர் ஆகி, பல கல்லூரிகளை நடத்துவதும்
இந்த நாட்டில்தான்...!

*அரிசியை விளைவித்த விவசாயி,
அரிசிக்காக ரேசன் கடையில்
வரிசையில் நிற்பதும்,
ஆபாச வழக்கில் சிக்கிய
ஆசிரமச் சாமியாரிடம் ஆசி பெற,
வரிசை கட்டி நிற்பதும்
இந்த நாட்டில்தான்...!

* கோடிக்கணக்கில் வங்கிக் கடன்
  வாங்கியவன், அதைக் கட்டாமல்,
  வெளிநாட்டுக்குக்  தப்பிச் செல்வதும்,
  ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிய
  விவசாயி அதைக் கட்ட முடியாமல்,
  விஷம் குடித்து சாவதும்
  இந்த நாட்டில்தான்...!

* தண்ணீர் கேட்டு
  போராடுபவர்கள் மீது
  தடியடி நடத்துவதும்,
  மதுவிலக்கை அமுல்படுத்த
  அழுத்தம் கொடுத்தால்,
  மதுக்கடைக்கு காவல்துறை 
  பாதுகாப்பளிப்பதும்
  இந்த நாட்டில்தான்...!

*தேசப்பிதாவைக் கொன்றவனை
தேசத் தலைவனாகக் கொண்டாடுவதும்,
தேச நலனுக்காகப் போராடுபவன் மீது
தேசத் துரோக வழக்கு பாய்வதும்
இந்த நாட்டில்தான்...! 

* ஜனநாயகம் என்ற பேரில்,
  சர்வாதிகார ஆட்சி நடப்பதும்,
  சாமானியர்களின் அரசு என்ற பேரில்,
  சாமியார்களின் ஆட்சி நடப்பதும்
  இந்த நாட்டில்தான்...!

தீருமா இந்த அவலநிலை

💭 WhatsApp...

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics