ஜெபம் - ஜெபம் - ஜெபம்..

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*ஜெபம் - ஜெபம் - ஜெபம்...!!*
➖➖➖➖➖➖➖

*ஆவியோடும், கருத்தோடும், ஜெபம் பண்ணுங்கள்.!!*

*1கொரி்-14:15*
------------------------------

*"இகக்கட்டுக்களில்" இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.*

*சங்-141:5*
----------------------------

*"துக்கத்தில்" இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள்.*

*சங்-39:1-3*
-----------------------

*"தேவசித்தத்தின்படி" ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணுங்கள்.*

*மத்-26:42*
----------------------

*எல்லா நகரங்களும், கூடி எல்லா மக்களும் ஆர்வமாய் ஒருமுகமாய் தேசத்திற்க்காக "உபவாசம் இருந்து" ஜெபம் பண்ணுங்கள்.*

*2 நாளா-20:1-24*
-----------------------------------

*"அதிகாலையில்" ஜெபம் பண்ணுங்கள்.*

*மாற்கு-1:35*
-----------------------------

*பெற்றுக்கொள்வோம் என்ற "விசுவாசத்தோடு" ஜெபம்  பண்ணுங்கள்.*

*மாற்கு-11:24*
-----------------------------

*நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு "விழித்திருந்து" ஜெபம் பண்ணுங்கள்;*

*மத்-26:41*
-------------------------

*ஜெபம் பண்ணுவதில் ..... "இடைவிடாமல்" தரித்திருங்கள்.*

*அப்-6:4*
---------------------

*எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் "தெளிந்த புத்தியுள்ளவர்களா யிருந்து", ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.*

*1 பேது-4:7*
----------------------------

*நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, "ஒருவருக்காக ஒருவர்" ஜெபம் பண்ணுங்கள்.*

*நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் (ஜெபம்) மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.*

*யாக்-5:16*
-------------------------

*"இடைவிடாமல்" ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.*

*கொலோ-4:2*
-------------------------------

*"பெண்கள்" தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக் கொள்ளுங்கள்.*

*1கொரி-11:13*
--------------------------------

*மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது     எப்போதும் "சந்தோஷத்தோடே" ஜெபம் பண்ணுங்கள்.*

*பிலி-1:4*
---------------------

*நீங்கள் ஒன்றுக்குங் "கவலைப்படாமல்"  எல்லாவற்றையுங்குறித்து ஜெபம் பண்ணுங்கள்.*

*பிலி-4:6*
-----------------------

*ஒருவர்பேரில் உண்டான அவரவர் குறையை "மன்னித்து" ஜெபம் பண்ணுங்கள்.*

*மாற்-11:25*
----------------------------

*கூட்டமாய், "கூடி" ஜெபம் பண்ணுங்கள்.*

*லூக்-1:10*
---------------------------

*"தனிமையான" இடத்தை தேர்ந்தெடுத்து ஜெபம் பண்ணுங்கள்.*

*மாற்-6:46*
---------------------------

*"சோர்ந்து போகாமல்" ஜெபம் பண்ணுங்கள்.*

*லூக்-18:1*
-------------------------

*அதிக "ஊக்கத்தோடு" ஜெபம்பண்ணுங்கள்.*

*லூக்-22:44*
------------------------------

*ஜெபத்திலே "உறுதியாய்" தரித்திருங்கள்.*

*ரோம-12:12*
------------------------------

*"சபைக்காக" "சபையினருக்காக" ஜெபம் பண்ணுங்கள்.*

*எபே-3:14-21*
------------------------------

*"பரிசுத்தவான்களுக்காக" வேண்டுதல் செய்து ஜெபம் பண்ணுங்கள்.*

*எபே-6:18*
--------------------------

*"ஆவியிலே" ஜெபம் பண்ணுங்கள்.*

*எபே.6:18*
----------------------------

*"எல்லா மனுஷருக்காகவும்" ஜெபம் பண்ணுங்கள்.*

*1தீமோ-2:1*
----------------------------

*உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்" உங்களைத் "துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்" ஜெபம் பண்ணுங்கள்.*

*மத்-5:44*
---------------------------

*நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் "பிதாவை நோக்கி" ஜெபம்பண்ணு;*

*மத்-6:6*
-----------------------------------

*நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல "வீண் வார்த்தைகளை" அலப்பாதேயுங்கள்;*

*மத்-6:7*
-----------------------

*நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் "பெற்றுகொள்வோம்"என்று விசுவாசியுங்கள்..*

*மாற்-11:24*
---------------------------

*கடைசி காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.*

*மாற்-13: 33*
-------------------------------
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🙋‍♂
*நீங்கள் இரண்டு பேரோ, மூன்று பேரோ, ஜெபிக்கும்போது கர்த்தர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.*

🙋‍♂
*இயேசு கிறிஸ்து முழு இரவும் ஜெபித்தார்.*

🙋‍♂
*தானியேல் தன் சிறிய வயதிலும் தினம் மூன்று வேளை ஜெபிக்கிறவராய் இருந்தார்.*

🙋‍♂
*அன்னாள் என்ற மனுஷி (ஏழு வருடம் கணவருடன் வாழ்ந்து (விதவையானவர்) எண்பத்துநாலு வயதிலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.*

*லூக்-2: 37*
➖➖➖➖➖➖➖➖

➖➖➖➖➖➖➖
*ஜெப வீரர்கள் :-*
➖➖➖➖➖➖➖

🙋‍♂
*பவுல் தன் ஊழியம் முழுவதிலும் விசுவாசிகளுக்காகவும் ஊழியர்களுக்காவும் சபைக்காகவும் 69 வயது வரை ஜெபித்துக்கொண்டே இருந்தார், ஜெப வீரராய் இருந்தார்.*

*எபே-3:14-21*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics